புதன், 1 பிப்ரவரி, 2012

திங்கள், 12 செப்டம்பர், 2011

அக்டோபர் 20ம் தேதி பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜராக உத்தரவு பதிவு செய்த நாள் : 9/13/2011 0:18:32


அக்டோபர் 20ம் தேதி பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜராக உத்தரவு

புதுடெல்லி : சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்காக பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா அக்டோபர் 20ம் தேதி ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா, கடந்த 1991&96ம் ஆண்டில் முதன்முறை முதல்வராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. 

இந்த வழக்கு பெங்களூர் தனி நீதிமன்ற விசாரணையில் உள்ளது. வழக்கில் நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும். இதற்காக ஆஜராகுமாறு ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால், ஜெயலலிதா ஆஜராகவில்லை. பாதுகாப்பு காரணங்களால் நீதிமன்றத்தில் ஆஜராக தனக்கு விலக்கு அளித்து, எழுத்து மூலம் வாக்குமூலம் அளிக்க அனுமதிக்க வேண்டும் அல்லது வீடியோ கான்பரன்ஸ் மூலம் கேள்வி&பதிலை பதிவு செய்ய வேண்டும் என்று கோரி அவர் மனு தாக்கல் செய்தார். இதை தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் கடந்த 5ம் தேதி விசாரித்தனர். தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென அப்போது உத்தரவிட்டனர். இந்நிலையில், இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் வக்கீல் ஹரீஷ் சால்வே கூறுகையில், ‘தனி நீதிமன்றத்தில் ஆஜராக ஜெயலலிதா தயாராக உள்ளார். பாதுகாப்பு கருதி, வேறொரு கட்டிடத்தில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரினார்.

இதை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:  பெங்களூர் தனி நீதிமன்றத்தில் அக்டோபர் 20ம் தேதி, ஜெயலலிதா ஆஜராக வேண்டும். பாதுகாப்பு பிரச்னை காரணமாக, வேறொரு கட்டிடத்தில் விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை தனி நீதிமன்ற நீதிபதி பரிசீலித்து முடிவெடுப்பார். ஜெயலலிதாவிடம் ஒரே நாளில் விசாரித்து முடிக்க வேண்டும். அவர் ஆஜராகும் போது கர்நாடக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
பதிவு செய்த நாள் : 

சனி, 10 செப்டம்பர், 2011

தாய், தந்தைஇன் பேச்சை கேட்காத பிள்ளைகளுக்கு ??????

தாய் – தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை ‘சீ’ என்றுகூடக் கூராதீர். மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக ( திருக்குர் ஆன் 17:23 ). அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க, பைஹகியில் பதிவாகியுள்ள ஆதாரப்பூர்வமான நபிவழிச்செய்தி: ‘ஒவ்வொரு குற்றத்திற்கான த...ண்டனையும் மறுமையில் வழங்கப்படுவதுதான் இறைவிதி. ஆனால் பெற்றோருக்கு நோவினை செய்தவன் அதற்கான பிரதிபலனை இவ்வுலகிலேயே கண்கூடாகக் கண்டபின்பே இறப்பான். (நவூதுபில்லாஹ்) ‘தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது” என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதை மறந்து விட வேண்டாம். நாம் அணைவரும் பெற்றோரைப் பேணக்கூடியவர்களாகத் திகழ எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

எனக்கு ரூ.51 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன: முதல்வர் அறிவிப்பு

சென்னை:""நான் எந்த புதிய சொத்தும் வாங்கவில்லை, எனக்கு, 51 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளன,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், இந்திய குடியரசு கட்சி உறுப்பினர் செ.கு.தமிழரசன் பேசும்போது, "வஞ்சகம், போலி நிறைந்த அரசியல் உலகில் நம்பகத்தன்மைக்கு இலக்கணமாக முதல்வர் ஜெயலலிதா விளங்குகிறார். மனசாட்சியை தவிர வேறு எதற்கும் அவர் அஞ்சமாட்டார். அவர் சொத்துக்கணக்கு வெளியிடவில்லை என, ஒரு ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முதல்வர் விளக்கம் தருவாரா?' என, கேட்டார்.


இதற்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பதில்:பெரிய ரகசியத்தை கண்டுபிடித்தது போல, அந்த ஆங்கிலப் பத்திரிகை அப்படி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. என் சொத்து விவரத்தில் எந்த ரகசியமும் இல்லை; ஒளிவுமறைவும் இல்லை. இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒரு விதியின் படி, சட்டசபை, லோக்சபா, ராஜ்யசபா பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போது, தங்களது சொத்துக்களின் விவரங்கள் பற்றி தெரிவிக்க வேண்டும்.அந்த அடிப்படையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் நடந்த தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியில் நான் போட்டியிட்டேன். அப்போது என் சொத்துக்களின் பட்டியலை வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ளேன். என் சொத்து விவரத்தை அப்போதே பத்திரிகைகள் வெளியிட்டு விட்டன.


ஸ்ரீரங்கம் தொகுதியில் நான் போட்டியிட்ட போது, அசையும் சொத்து, 13 கோடியே, 3 லட்சத்து, 27 ஆயிரத்து, 979 ரூபாய். அசையா சொத்து, 38 கோடியே, 37 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய். ஆக மொத்தம், 51 கோடியே, 40 லட்சத்து, 67 ஆயிரத்து, 979 ரூபாய்.சட்டசபை தேர்தல் முடிந்து மூன்று மாதம் தான் ஆகியுள்ளது. இந்த மூன்று மாதத்தில் நான் எந்த புதிய சொத்தும் வாங்கவில்லை. ஏற்கனவே சொத்து விவரத்தை வெளியிட்டுள்ளேன். எனவே, மீண்டும் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.